எபோலாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் மீண்டு வருகிறார்: பீதி அடைய தேவையில்லை: சுகாதாரத்துறை மந்திரி
லைபீரியாவிலிருந்து இந்தியா திரும்பிய இந்தியர் ஒருவருக்கு எபோலா தொற்று இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள், இந்த விவகாரத்தில் அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருப்பாகவும் யாரு பீதி அடைய தேவையில்லை என்று சுகாதாரத்துறை மந்திரி ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
”இது மிகவும் ஆபத்து நிறைந்த ஒன்று. எபோலா நோய்க்கு அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் இந்தியாவுக்கு வந்த பிறக்கு தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கபப்ட்டுள்ளார். அந்த இளைஞர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். நிலைமை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளோம். எனவே பீதி அடைய தேவையில்லை. நிலைமை கட்டுபாட்டின் கீழ் உள்ளது” என்று சுகாதராத்துறை மந்திரி ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் டெல்லிக்கு விமானம் மூலம் வந்த இவர்மீது , உலக சுகாதார அமைப்பின்(WHO) விதிமுறைகளின்படி செய்யப்பட்ட பரிசோதனைகளில், எந்த ஒரு வைரஸ் தொற்றும் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவரது விந்தில் எபோலா வைரஸின் சில கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது எபோலோ நோய் அல்ல. என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தாக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மேலும்,
அண்மை வாரங்களில் எபோலோ நோய் பரவியுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் ஆயிரகணக்கான பயணிகளை இந்தியா தடுத்துள்ளது நினைவு கூறத்தக்கது.
எபோலாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் மீண்டு வருகிறார்: பீதி அடைய தேவையில்லை: சுகாதாரத்துறை மந்திரி
Category:
0 comments