கன மழை: நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார். அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துகுடியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தி்ல் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். ரத்து செய்யப்பட்ட தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
கன மழை: நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Category:
0 comments