50 லட்சம் பேர்ர் நாடுகடத்தும் அபாயம்: அமெரிக்க குடியுரிமை சட்டத்தை திருத்தி அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கபடும் அதிபர் ஒபாமா அறிவிப்பு
அமெரிக்க நாட்டில் 50 லடசத்துக்கும் அதிகமான வெளிநாட்டினர் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வசித்து வருகிறார்கள். இது 2008–ம் ஆண்டு நிலவரம். 2 லட்சத்து 40 ஆயிரம் இந்தியர்களும் சட்டவிரோதமாக அங்கு குடியிருப்போர் பட்டியலில் அடங்குவார்கள்.
இப்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருப்போரின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சட்டம் இயற்றவேண்டும் என்பது அந்த நாட்டின் ஜனாதிபதியான ஒபாமாவின் விருப்பம்.
ஆனால், பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சி மறுத்து வருகிறது. இப்போது சமீபத்தில் நடந்த தேர்தல்களுக்கு பின்னர் இரு சபைகளிலும் அந்த கட்சி மெஜாரிட்டி பெற்று, அதன் கை ஓங்கி உள்ள நிலையில், ஒபாமா விருப்பப்படி சட்டம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் சமீபத்திய தேர்தலில் ஜனநாயக கட்சி தோல்வியைத் தழுவிய பின்னர் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றிய ஒபாமா, பாராளுமன்றத்தில் குடியரசு கட்சியுடன் இணைந்து செயல்பட தான் தயாராக இருந்தாலும், குடியுரிமை சீர்திருத்தம் போன்ற முக்கிய விஷயங்களில் பாராளுமன்றத்தின் முடிவை நிராகரிப்பேன் என திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்த நிலையில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியிருப்போர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், குடியுரிமை விதிகள் தொடர்பாக ஒபாமா இந்த வார இறுதிக்குள் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பிப்பார் கூறபட்டது. .
அதிபர் ஒபாமா நேற்று மாலை மிக தொலைநோக்கான குடியேற்ற நிர்வாக நடவடிக்கைகள் குறித்து டெலிவிஷனில் நேரடியாக உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்காவில் 50 லட்சம் மக்கள் நாடு கடத்தும் அச்சுறுத்தலில் உள்ளனர். இது பாதுகாப்பான தங்கும் இடமோ அல்லது மன்னிப்பு வழங்கும் சபையோ அல்ல.அதற்கு பதிலாக பொறுப்புடைமையோடு புலம பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் ஆவணமற்ற ஒப்பந்த வடிவம் கொண்டு வரவேண்டும். நீங்கள் விதிகளுக்கு சம்மதித்தால் நான் உங்களை நாடு கடத்தவில்லை என்பதை ஏற்கிறேன்.
இயேசுவே நாங்கள் ஒரு அந்நியனுக்கும் அநியாகம் செய்யக்கூடாது என புனித நூல் சொல்கிறது.நாம் அந்நியனின் இதயத்தை அறிந்து கொள்ள வேண்டும்.ஒரு காலத்தில் நாமும் அந்நியர்களாக இருந்தோம். லடசகணக்கானவர்களை நாடுகடத்துவது என்பது யதார்த்தமான் காரியம் அல்ல. பொது மன்னிப்பு என்பது நியாயமற்றதாக இருக்கும். நமது தன்மைக்கு மாறாக பரந்த நாடு கடத்தல் எனபது சாத்தியமற்றது. இதை விளக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. ஒரு நடுநிலையான அணுகுமுறையை கையாள வேண்டும்.
ஒபாமா குடியரசு கட்சியின் விமர்சனங்களை நிராகரித்தார்.பாராளுமன்றம் தனது முடிவை சொல்லும். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது நிர்வாக நடவடிக்கை எனபது பொது மன்னிப்புக்கு ஒப்பாகும்.விரிவான குடியேற்ற சீர்திருத்த சட்டம் விரைவில் கொண்டுவரவேண்டும் என வற்புறுத்தினார்.ஆனால் அதை குடியரசு கடசியினர் தடுத்து உள்ளனர்,
இன்று நமது குடியுரிமை சட்டம் சிதைந்து போய் உள்ளது அது எல்லோருக்கும் தெரியும்.பல சதாப்பதங்களா அது அப்படியே உள்ளது அதுபற்றி நாம் அதிகம் சிந்திக்கவில்லை என்று கூறினார்.
ஒபாமாவின் 10 நிமிட பேச்சில் குடியேற்ற நிர்வாக நடவடிக்கை அரசை அரசியல் ரீதியாக ஆத்திரமூட்டும் அம்சம் என்பதை சுட்டிகாட்டினார்.
50 லட்சம் பேர்ர் நாடுகடத்தும் அபாயம்: அமெரிக்க குடியுரிமை சட்டத்தை திருத்தி அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கபடும் அதிபர் ஒபாமா அறிவிப்பு
Category:
0 comments