அடுத்த ஆண்டு ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பாகம் - செல்வராகவன்

Unknown | சனி, ஜூன் 07, 2014 | 0 comments

Selvaragavanஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு வெளியிடப் போவதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்தாரண்ர். இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு சிம்பு – த்ரிஷாவை வைத்து புதிய படம் ஒன்றை உருவாக்கவிருந்தார் செல்வராகவன். ஆனால் அந்தப் படம் எதிர்பாராத விதமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக செல்வராகவன் அறிவித்துள்ளார். இரண்டாம் பாகத்திலும் கார்த்தியையே நடிக்க வைக்கப் போகிறார்களாம். இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், “ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் உள்ளது. ஆனால் இதுபற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. ஆனால் இந்த மாதிரி வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டால்தான் சினிமா சுவாரஸ்யமாக இருக்கும். இல்லாவி்ட்டால் காமெடிப் படங்கள்தான் எடுக்கணும்,”என்றார்.



அடுத்த ஆண்டு ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பாகம் - செல்வராகவன்

Category:

0 comments