தமிழக மீனவர்கள் 82 பேரை விடுவிக்க இலங்கை அதிபர் ராஜபக்ஷே உத்தரவு

Unknown | திங்கள், ஜூன் 09, 2014 | 0 comments

Fishermanதமிழக மீனவர்கள் 82 பேரை விடுவிக்க இலங்கை அதிபர் ராஜபக்ஷே உத்தரவிட்டுள்ளார். ராஜபக்சேவின் உத்தரவை அடுத்து தமிழக மீனவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். முன்னதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 82 மீனவர்களையும் காவலில் வைக்க இன்று காலை இலங்கை கோர்ட் உத்தரவிட்டிருந்தது.


மன்னார் நீதிமன்றத்தில் 46 மீனவர்களும், ஊர்காவல் கோர்ட்டில் 36 மீனவர்களும் ஆஜராகினர். 46 மீனவர்களை ஜுன் 16 வரையும், 36 பேரை ஜுன் 20-ம் தேதி வரையும் சிறையில் அடைக்க இலங்கை நிதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.



தமிழக மீனவர்கள் 82 பேரை விடுவிக்க இலங்கை அதிபர் ராஜபக்ஷே உத்தரவு

Category:

0 comments